×

இந்தியாவில் முதலீடு: வாரன் பஃபெட் விருப்பம்

வாஷிங்டன்: கோடீஸ்வர முதலீட்டாளரான வாரன் பஃபெட், இந்தியாவில் முதலீடு செய்வதற்கான தனது விருப்பத்தை வெளிப்படுத்தி உள்ளார். உலகின் டாப் 10 கோடீஸ்வரர்களில் ஒருவரும், முதலீட்டு உலகின் முடிசூடா மன்னனாகவும் திகழும் அமெரிக்காவை சேர்ந்த வாரன் பஃபெட், பெர்க்ஷயர் ஹாதவே நிறுவனத்தின் சிஇஓ, தலைவர், இணை நிறுவனராக உள்ளார்.

அந்நிறுவனத்தின் வருடாந்திர கூட்டத்தில் பங்கேற்ற வாரன் பஃபெட், இந்தியாவில் முதலீடு செய்வது குறித்து கேள்விக்கு பதிலளிக்கையில், ‘‘இது மிகவும் நல்ல கேள்வி. இந்தியா போன்ற நாடுகளில் நிறைய வாய்ப்புகள் உள்ளன. அவை இன்னமும் ஆராய்ந்து பார்க்கப்படாமல் உள்ளன. எனவே எதிர்காலத்தில் எனது நிறுவனம் அதை ஆராய்ந்து பார்க்கும்’’ என்றார்.

The post இந்தியாவில் முதலீடு: வாரன் பஃபெட் விருப்பம் appeared first on Dinakaran.

Tags : India ,Warren Buffett ,Washington ,America ,CEO ,Berkshire Hathaway ,Dinakaran ,
× RELATED இந்தியாவில் நடந்து வரும்...